பொது தமிழ் இலக்கணம்

0 Comments

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

முதலெழுத்தும் சார்பெழுத்தும் 

    முதலெழுத்து

  • உயிர் எழுத்து 12 ம், மெய்யெழுத்து 18 ஆகிய 30 எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் ஆகும்.

   சார்பெழுத்து

  • முதல் எழுத்தை சார்ந்துவரும் எழுத்துக்கள் சார்பெழுத்து ஆகும். 
  • 10 வகைப்படும்.

உயிர்மெய்:

  • உயிர் மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். (க் + அ= க)
  • வரி வடிவம் மெய் எழுத்தை ஒத்திருக்கும் (க)
  • ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்

ஆய்தம்:

  • முப்புள்ளி, முப்பாற்ப்புள்ளி,  தனிநிலை என்ற பெயர்களும் இதற்கு உண்டு..
  • தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.(அஃது) தனித்து இயங்காது

குற்றியலுகரம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை

  • அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 
  • குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்

குற்றியலிகரம்:

  • ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும் இகரம்
  • குறுமை+இயல்+இகரம் = குற்றியலிகரம்

முற்றியலுகரம்:

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்
  • வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும் 
  • இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்

 எ.கா: புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

குற்றியலுகரத்தின் வகைகள்:

  1. வன்தொடர் குற்றியலுகரம்:

வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம்

 எ.கா: பாக்கு பேச்சு பாட்டு, உப்பு,  பற்று

  1. மென்தொடர் குற்றியலுகரம்:

மெல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென் தொடர் குற்றியலுகரம்.

 எ.கா: பங்கு, மஞ்சு,  பண்பு, பந்து, அம்பு, கன்று

  1. இடைத்தொடர்க் குற்றியலுகரம்:

இடையின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

 எ.கா: ய்து, மார்பு, சால்பு, மூழ்கி

  1. நெடில் தொடர் குற்றியலுகரம்

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும் .

இவை ஈரெழுத்து சொற்களாக மட்டும் அமையும் சொற்களாக மட்டும் அமையும். 

எ.கா: பாகு,  மாசு பாடு காது று

  1. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:

தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

 எ.கா: அசு (ர = ர் + அ),   கயிறு ( யி = ய்+ இ)

  ஒன்து ( ப = ப் + அ) , வரலாறு(லா= ல் + ஆ)

  1. ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆயுதத் தொடர் குற்றியலுகரம் 

எ.கா: அஃது, எஃகு

குற்றியலிகரம் இரண்டு இடங்களின் மட்டும் வரும்:

இடம் 1:

  • குற்றியலுகர சொற்களை தொடர்ந்து கரத்தை முதல் எழுத்தாக கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்,
  • அது அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும்.

 கொக்கு + யாது = கொக்கியாது

எனப்படுவது + யாது = எனப்படுவதியாது

இடம் 2:

  • மியா என்பது ஒரு அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது)
  • இதில் மி யில் உள்ள இகரம் குற்றியலிகரம்

  கேள்+ மியா = கேண்மியா

 செல்+ மியா = சென்மியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

அளபெடை

0 Comments

TNPSC group IV இலக்கணம் அளபெடை அளபெடை அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல்…